பெங்களூரு: கர்நாடகத்தில் காலபுராகி மாவட்டத்தில் ஆலந்த் சட்டமன்ற பிரிவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் சுபாஷ் குட்டெதருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது செயலாளர் கூறியுள்ளார்.
மேலும், குட்டெதரின் உறவினரும், முன்னாள் அப்சல்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மாலிகய்யா குட்டெதாரும் நேற்று தொற்றுக்கு பாதிக்கப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்த பிதார் துணை ஆணையர் ஆர்.ராமச்சந்திரன் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


