இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவல் காரணமாக 11 நீதிமன்றங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத் பார் அசோசியேஷன் செயலாளர் நபில் தாஹிர் மிட்சா கூறுகையில்,
12 நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறிந்த நிலையில் அடுத்த 14 நாள்களுக்கு நீதிமன்றங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட நீதிமன்றங்களில், மூன்று கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதிகள், ஒரு மூத்த சிவில் நீதிபதி மற்றும் ஏழு சிவில் நீதிமன்றங்களின் நீதிபதிகள் என்று அவர் கூறினார்.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறை மீறல்கள் காரணமாகவே நிலைமை ஆபத்தானது என்று வியாழக்கிழமை பார் அசோசியேஷன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி மேலும் 154 பேருக்கு கரோனா தொற்றும், ஒரு பலியும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,810 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தான் தலைநகரில் கரோனாவுக்கு மொத்த பலி எண்ணிக்கை 215 ஆகவும், மொத்த பாதிப்பு 19,454 ஆகவும் உள்ளது. தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 1,480 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


