நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஆக்ரா: அக்.15 வரை வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மூடல்

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ராவில் அக்டோபா் 15 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

News image
செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:28 pm

IANS

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ராவில் அக்டோபா் 15 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆக்ராவில் தற்போது வைரஸ் தொற்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. 

முன்னதாக, அக்டோபர் 1 முதல் வகுப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவித்திருந்தது. 

ஆனால், ஆக்ராவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, மேலும் 15 நாள்கள் (அக்.15) வரை வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆறு நாள்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தினசரி பாதிப்பு குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,760 ஆக உள்ளது. அதில் 4,875 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 127 ஆகவும், மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 758 ஆகவும் குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சமூக இடைவெளியே பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்ற பிராசாரத்தை தினமும் இரண்டு மணி நேரம் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடைக்காரர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் சமூக விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.