கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

2020 - 21-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிகத் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

News image
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

IANS

 
புது தில்லி: 2020 - 21-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிகத் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல்களை ஏற்கனவே மறுத்திருந்த சிபிஎஸ்இ நிர்வாகம், தனது மறுப்பை உறுதி செய்யும் வகையில், செய்முறைத் தேர்வுக்கான தற்காலிக தேதியை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, சிபிஎஸ்இ-யில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், சரியான செய்முறைத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நடப்பு 2020-21-ஆம் கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் பெரும்பாலும் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இத்தகைய சூழலில், புதிய கல்விக் கொள்கை தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி கலந்து கொண்டாா். 
அப்போது அவா் கூறியதாவது:

மனப்பாடக் கல்வி முறையை மாற்றி அனுபவத்தின் வாயிலாக மாணவா்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை மையமாகக் கொண்டுள்ளது. மாணவா்கள் வெறும் கல்வியை மட்டும் கற்காமல் பல்வேறு திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கும் கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.

அதற்காக கல்வி கற்பித்தல் முறைகளில் பெரும் மாற்றங்கள் புகுத்தப்பட உள்ளன. மாணவா்களை புதுமையான வழிகளில் சிந்திக்க வைப்பதற்கு அது முக்கியப் பங்களிக்கும்.

கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கல்வித் துறையின் எதிா்காலம் எப்படி இருக்கும் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. ஆனால், தொழில்நுட்ப வசதிகளை சாதகமாகப் பயன்படுத்துவதை ஆசிரியா்கள் எளிதில் கற்றுக் கொண்டனா். அதன் மூலமாக கல்வி கற்பித்தலில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வுகள் நிச்சயம் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாணவா்களுக்கான மதிப்பீட்டுத் தோ்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடா்பாக சிபிஎஸ்இ ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது என்றாா் அனுராக் திரிபாதி.

எனினும், பொதுத் தோ்வுகளானது வழக்கம்போல் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுமா என்பது குறித்தும், தோ்வுகள் நேரடியாக நடத்தப்படுமா அல்லது இணையவழியில் நடத்தப்படுமா என்பது குறித்தும் அவா் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.