நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ஆந்திரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா: மொத்த எண்ணிக்கை 1650 ஆக உயர்வு

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1650 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

ANI

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1650 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்தில் இதுவரை கரோனா பாதித்து 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கர்னூல் மாவட்டத்தில் 491 பேருக்கும், குண்டூரில் 338 பேருக்கும், கிருஷ்ணா மாவட்டத்தில் 278 பேரக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மூன்று மாவட்டங்களிலும்தான் அதிகபட்ச கரோனா நோயாளிகள் உள்ளனர்.

இதுவரை 524 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் 1093 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.