நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

சிமெண்ட் கலவை வாகனத்தில் வந்த 18 பேர்: இந்தூரில் பிடிபட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கலக்கும் கலவை இயந்திரத்தில் வந்த 18 பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

ANI


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கலக்கும் கலவை இயந்திரத்தில் வந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இருந்து லக்னௌ நோக்கிச் சென்று கொண்டிருந்த கலவை இயந்திரத்தை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கலவை இயந்திர வாகனத்தின் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சோதனை நடத்தியதில், அந்த கலவை இயந்திரத்துக்குள் 18 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

கலவை இயந்திர ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.