தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வாங்குகிறது மத்திய அரசு

உடனடியாக 11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :2 மே 2020, 12:33 pm

புது தில்லி: உடனடியாக 11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், ஹிந்துஸ்தான் லாடெக்ஸ் லிமிடட் லைஃப்கேர் நிறுவனம் மாத்திரைகளை வாங்குகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் மலேரியாவைக் குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஒன்று மட்டும் தான் கரோனா  நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது கரோனா நோயைக் குணப்படுத்தவில்லை என்றாலும், மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் ஒரே மருந்தாகும்.

இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், இந்தியாவில் இருக்கும் ஐபிசிஏ  மற்றும் ஸைடஸ் காடிலா மருந்து நிறுவனங்களிடம் சுமார் 11.45 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உற்பத்தி செய்துக் கொடுக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குகிறது.

இதையடுத்து, 6.64 கோடி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன, மீதமிருக்கும் மாத்திரைகள் மே 16ம் தேதியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.