தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க  மத்திய அரசு அனுமதி

பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள் விவகாரத் துறை அமை

News image
Updated On :1 மே 2020, 12:13 pm

புது தில்லி: பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் மூலமாக வெளிமாநில மக்களை அனுப்பும் நடைமுறைகள் குறித்து மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு மாநிலத்தில் இருந்து அனுப்பப்படும் வெளிமாநிலத்தவர்களை அனுப்பும் மாநிலமே பரிசோதிக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிறப்பு ரயில் இயக்கப்படும் ரயில் நிலையத்துக்கு, வெளிமாநிலத்தவர்களை அனுப்பும் மாநில அரசு தான் பேருந்துகள் மூலம் பிரிவு பிரிவாக அழைத்து வர வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வரும் மக்களை பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற அனைத்தையும் அவர்களது சொந்த மாநில அரசே மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்களையும் அனுப்பும் மாநில அரசே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.