மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை?

கேரளாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து அவர்களது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். 

News image
மாதிரிப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:08 pm

ENS


கேரளாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து அவர்களது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். 

இதனால், கேரள மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக மழலையர் பள்ளிகளுக்காவது கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொச்சியில் உள்ள பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள், மழலையர் வகுப்புகளுக்கு வரும் திங்கட்கிழமையே கடைசி நாள் என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மழலையர்களுக்கு அறிவுறுத்தவோ, அவர்களை அதன்படி செயல்படுமாறு வலியுறுத்தவோ முடியாது என்பதால், மழலையர் வகுப்புகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசிய கவுன்சில் பொதுச் செயலர் இந்திரா ராஜன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.