பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளுக்கு திருமணம்: எளிமையாக நடந்தது (புகைப்படங்கள்)

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் - டி.ஒய்.எஃப்.ஐ. தேசியத் தலைவர் பி.ஏ. மொஹம்மத் ரியாஸ் திருமணம் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

News image

Kerala CM Pinarayi Vijayan's daughter Veena marries DYFI national president PA Mohammed Riyas

Updated On :15 ஜூன் 2020, 7:19 am


திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசியத் தலைவர் பி.ஏ. மொஹம்மத் ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

Story image

கரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக மிகக் குறைவான உறவினர்களே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Story image

உறவினர்கள் தவிர்த்து, கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜீஷ் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

Story image

பினராயி விஜயனின் மகள் வீணா, தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மணமகன் மொஹம்மது ரியாஸ் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதரின் மகனாவார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.