பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சட்டீஸ்கரில் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடித்து 16 பேர் பலி; உப்புத் தூவும் மாவட்ட நிர்வாகம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடித்து இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :8 ஜூன் 2020, 10:01 am

ராய்புர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடித்து இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில், பாம்புகளிடம் இருந்து பாதுகாக்க வளாகத்தைச் சுற்றி மாவட்ட நிர்வாகம் உப்புத் தூவி வருவது கடும் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் ஜோத்புர் மாவட்டத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இருக்கும் ராய்பூர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டீஸ்கரின் நாகலோகம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் மட்டும் 200 வகையான விஷப் பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து சட்டீஸ்கர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அங்குள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 16 பேர் பாம்புக் கடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரை பாம்புகளிடம் இருந்து பாதுகாக்க பெனாயிலுடன் உப்பைக் கலந்து, தனிமைப்படுத்தும் வளாகத்தில் தூவி, பாம்பிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதுபோன்ற வழிமுறைகள் பாம்புகளிடம் இருந்து தப்பிக்க உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது உயிருடன் விளையாடும் விஷயம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.