மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் நகரில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் சரர்பூர் நகரில் உள்ள உத்கர்ஷ் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் நிகழ்ந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.
சதர்பூரின் தலைமை காவலர் உமேஷ் சுக்லா கூறுகையில்,
கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.
கடந்த ஜூலை 27-ல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று இறந்தவரின் உறவினர் ரஷித்கான் கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் நேற்று தொலைபேசியில் பேசினோம், பாதிக்கப்பட்டவர் உணவை விழுங்குவதில் சிரமம் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார். அவர் உயிரிழந்ததற்கான காரணம் தெரிவியவில்லை என்றார்.
மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


