மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அசாம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

News image

அசாமில் வெள்ளம்

Updated On :27 ஜூலை 2020, 8:23 am

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வந்த கனமழை காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், அசாமில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 56,71,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 615 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கசிரங்கா தேசியப் பூங்காவில் 132க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கியும், வாகனத்தில் அடிபட்டும் பலியாகியுள்ளன. 

மேலும், அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள திகிர்பம் பஜாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிராம மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அசாமின் பல்வேறு மாவட்டங்களில் இந்தாண்டு நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.