மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இந்தியாவில் தான் குறைவான கரோனா பாதிப்பு, குறைவான பலி : ஹர்ஷ் வர்தன்

உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கரோனா பாதிப்பும், குறைவான உயிர்பலியும் நேரிடுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

News image

இந்தியாவில் தான் குறைவான கரோனா பாதிப்பு, குறைவான பலி : ஹர்ஷ் வர்தன்

Updated On :24 ஜூலை 2020, 10:07 am


புது தில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கரோனா பாதிப்பும், குறைவான உயிர்பலியும் நேரிடுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இதுவரை நாட்டில் 1 கோடியே 5 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால், தொடர்ந்து கரோனா பரிசோதனை உயர்த்தி, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.45% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 2.3% ஆகவும் உள்ளது.

உலகிலேயே ஒரு லட்சம் பேரில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.