மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்

ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.

News image

ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக் காரருக்கு வந்த நோட்டீஸ்

Updated On :23 ஜூலை 2020, 6:50 am


சண்டிகர்: ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கின. பெரிய தொழில்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை பாதிப்பு பாதிப்புதான்.

ஏற்கனவே தொழில் முடங்கி வாழ்வாதாரம் தொலைந்து போயிருந்த குருக்ஷேத்ராவைச் சேர்ந்த டீக்கடைக்காரருக்கு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜ்குமார், சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். தனது மோசமான பொருளாதார நிலையை சமாளிக்க ஒரு வங்கியில் கடன் கேட்டு ராஜ்குமார் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் கேட்ட சொற்ப கடன் தொகையை தர முடியாது என்று மறுத்த வங்கி நிர்வாகம் அதற்கு சொன்ன காரணம்தான் ராஜ்குமாரை கலங்க வைத்துள்ளது.

ஏற்கனவே வங்கியில் வாங்கிய ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அதனை திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் வழங்க முடியாது என்றும் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு டீக்கடைக்காரருக்கு எப்படி வங்கியில் இருந்து ரூ.50 கோடி கடன் கொடுத்திருக்க முடியும் என்று அனைவதும் கேட்கிறார்கள். 

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், இவ்வாறு வாங்காத ரூ.50 கோடி கடனை என்ன செய்யப் போகிறோம் என்று தவித்து வருகிறார் ராஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.