நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து: ராணுவம் எச்சரிக்கை!

அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம்  எச்சரிக்கை செய்துள்ளது.

News image
அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம்  எச்சரிக்கை செய்துள்ளது.
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

IANS

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம்  எச்சரிக்கை செய்துள்ளது.

மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகு வரும் 21-ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் துவங்க உள்ளது.

இந்நிலையில் அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம்  எச்சரிக்கை செய்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளியன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய 9 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு கமாண்டர், பிரிகேடியர் வி.எஸ்.தாக்கூர் கூறுகையில், ‘அமர்நாத் யாத்ரீகர்களை தேசிய நெடுஞ்சாலை 44–இன் வழியாக தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளன.  ஆனால் அதனை முறியடிக்க எங்களிடம் திறனும் படைபலமும் உள்ளது. வெள்ளியன்று காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் வெள்ளியன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச்   சேர்ந்த வலீத் என்ற பயங்கரவாதி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.