ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.329 கோடி சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை

நீரவ் மோடிக்கு சொந்தமாக மும்பை, ராஜஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிரிட்டனில் இருக்கும் ரூ.329 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது

News image
Updated On :8 ஜூலை 2020, 1:11 pm


நீரவ் மோடிக்கு சொந்தமாக மும்பை, ராஜஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிரிட்டனில் இருக்கும் ரூ.329 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள சமுத்ர மஹாலின் 4 குடியிருப்புகள், கடற்கரையோர பண்ணை வீடு, லண்டனில் ஒரு குடியிருப்பு, பிரிட்டனில் ஒரு குடியிருப்பு, வங்கி முதலீடுகள், பங்குகள் உள்ளிட்டவையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்த சொத்தில் அடங்கும்.

பல்வேறு நாடுகளில் வைரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வந்த தொழிலதிபா் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

பிரிட்டன் காவல்துறையினரால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

அவரை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறை மும்பயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.