கடாக்: தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சோக சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் இருந்து 380 கிமீ தொலைவில் உள்ள நகரம் கடாக். இங்குள்ள ஹெச்.பி.எஸ் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் பஜாந்த்ரி (58). இவரது மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது இளைய மகள் அனுஷா பஜாந்த்ரி (16). பத்தாம் வகுப்பு மாணவியான இவர், அங்குள்ள தொண்டதாவ்யா உயர் நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது இம்மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்வுகளில் பங்கெடுத்து வருகிறார். வெள்ளியன்று இறுதித்தேர்வாக அவரின் மூன்றாவது மொழிப்பாடமான ஹிந்தித் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் முதுகுத் தண்டில் நடைபெற்ற அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சுரேஷ் சிறிதுகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். வெள்ளியன்று காலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். இதனால் அனுஷா நிலைகுலைந்து போனாலும் மனதினைத் தேற்றிக் கொண்டு தைரியத்துடன் சென்று தேர்வினை எழுதியுள்ளார். பகல் 01.30 மணியளவில் தேர்வு முடிந்து திரும்பி தநதையின் இறுதிச்சடங்கில் பங்குபெற்றுள்ளார்.
இதுதொடர்பாக கடாக் வட்டார கல்வி அலுவலர் கேளடி மட்டா செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கூறிய போது, ‘அனுஷா வேண்டுமானால் தேர்வை தற்போது தவிர்த்து விட்டு, ஆகஸ்டில் நடக்கும் துணைத் தேர்வுகளில் எழுதித் தேர்ச்சி பெறலாம் என்ற வாய்ப்பு அவர் முன் இருந்தது. ஆனால் தற்போதுள்ள கரோனா சூழ்நிலையால் ஏற்கனவே மார்ச்சில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடக்கின்றன, எனவே அதில் மேற்கொண்டும் தாமதம் வேண்டாம் என்பதற்காக மனதைத் தேற்றிக் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

