பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

50 வயதுக்குட்பட்ட, அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் இருக்கலாம்: கர்நாடக அரசு

கரோனா பாதித்து அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உடையவர்களும், 50 வயதுக்கு உட்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் இருக்கலாம்

Updated On :3 ஜூலை 2020, 9:32 am


பெங்களூரு: கரோனா பாதித்து அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உடையவர்களும், 50 வயதுக்கு உட்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் வீட்டில் இருக்கும் கரோனா நோயாளிகளின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு உள்ளிட்டவை நாள்தோறும் கண்காணிக்கப்படும்.

நோயாளியின் கையில், அவரது விவரங்கள் கொண்ட பட்டை ஒன்று பொருத்தப்படும்.

அதே சமயம், வேறு உடல் நலக் குறைபாடு இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படாது.

வீட்டில் இருக்கும் நோயாளிகள், தனி அறை மற்றும், அறையுடன் இணைந்த கழிவறை வசதி இருக்க வேண்டும்.

கரோனா உறுதி செய்யப்பட்டு 10 நாள்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருந்தால் அல்லது 17 நாள்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகே, கரோனா நோயில் இருந்து மீண்டவர் வீட்டில் தனிமைப்படுத்துவதில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.