தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஒடிசா அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

ஒடிசா மாநிலத்தில் மூத்த வேளாண்துறை அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
ஒடிசா அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

ENS


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் மூத்த வேளாண்துறை அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒடிசாவில், ஒரே நபரிடம் இருந்து இந்த அளவுக்கு லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோராபுட் மண்டலத்தின் வேளாண்துறை உதவி இயக்குநர் பிரதீப் குமார் மொஹாந்தியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரிடம் இருந்து 11.73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் எதற்காக பெறப்பட்டது என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.