அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆந்திரம்: பிணவறையில் மனிதக் கண்களைத் தின்று தீர்த்த எலிகள்

ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:40 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


எலுரு: ஆந்திர மாநிலம் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மனித உடலில் இருந்த கண்களை எலிகள் தின்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்த பகுதி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிருஷ்ண ஸ்ரீனிவாஸின் தொகுதிக்குட்பட்டதாக உள்ளது.

எலுரு மாவட்டத்தைச் சேர்ந்த வைகுந்த வாசு செவ்வாய்க்கிழமை டிராக்டர் மோதி பலியானார். இவரது உடல் எலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

புதன்கிழமை காலை அவரது உடலை வாங்க வந்த உறவினர்கள், வைகுந்த வாசுவின் கண்கள் மற்றும் கண் இமைகளை எலிகள் கடித்துத் தின்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானம் செய்த ஊழியர்கள் உடலை கொடுத்து அனுப்பினர்.

இதேப் போன்ற சம்பவம் கடந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் பிரேத பரிசோதனைக்கு வந்த செட்டி ஸ்ரீராம மூர்த்தியின் கண்களையும் எலிகள் கடித்துத் தின்ற கொடூரம் நடந்துள்ளது.

இது பற்றி ஊழியர்களிடம் கேட்டால், ஃப்ரீஸர்கள் வேலை செய்யாததால்தான் இந்த நிலை ஏற்படுவதாகவும், 6 ஃப்ரீஸர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்வதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், பிணவறை முழுக்க குப்பை மேடாக இருப்பதாகவும் சுத்தமாக வைத்திருக்காததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.