அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

2018-ல் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரம்

மிக நீண்ட தாமதத்துக்குப் பின்னர் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:26 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

மிக நீண்ட தாமதத்துக்குப் பின்னர் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதுமான தகவல்களின் அடிப்படையில் விவசாயிகள் தற்கொலை கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2017-ஆம் ஆண்டைப் போன்று 2018-ஆம் ஆண்டிலும் 6 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற ஆறுதல் தகவலும் கிடைத்துள்ளது. முன்னதாக 2017-ஆம் ஆண்டில் 7 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களிலும் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

தேசிய குற்றப்பிரிவு ஆவண ஆணையம் (என்சிஆர்பி) வெளியிட்ட இந்த தகவல்களின் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டில் விவசாயம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 10,349 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-ல் 10,655-ஆகவும், 2016-ல் 11,379-ஆகவும் இருந்தது.

2018-ல் தற்கொலை செய்துகொண்டவர்களில் 5,763 பேர் விவசாயிகளாகவும், 4,586 பேர் விவசாயத் தொழிலாளர்களும் ஆவர். தற்கொலை செய்துகொண்ட 5,763 விவசாயிகளில் 5,088 பேர் தங்கள் சொந்த நிலங்களில் பயிரிட்டவர்கள், இதர குத்தகைதாரர்கள் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. 

2018-ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த 1,34,516 தற்கொலைகளில் 7.7 சதவீதம் விவசாயிகளுடையது. விவசாயிகளின் தற்கொலையில் 17,972 (13.4 சதவீதம்) பேருடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. 13,896 பேர் (10.3 சதவீதம்) தமிழகத்திலும், மேற்கு வங்கத்தில் 13,255 பேரும் (9.9 சதவீதம்), 11,775 பேருடன் (8.8 சதவீதம்) மத்தியப்பிரதேசமும், 11,561 பேருடன் (8.6 சதவீதம்) கர்நாடகமும் விவசாயிகள் தற்கொலையில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. இதன்மூலம் 2018-ல் தற்கொலை செய்துகொண்ட மொத்த விவசாயிகளில் 50.9 சதவீதம் இந்த மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதர 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் அளவு 49.1 சதவீதமாக உள்ளது. 

2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை இல்லாத 6 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களின் பட்டியல் பின்வருமாறு:

மேற்கு வங்கம்
பிகார்
ஒடிஸா
உத்தரகண்ட்
மேகாலயா
கோவா
சண்டிகர்
தாம் அண்ட் டையு
தில்லி
புதுச்சேரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.