அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஆந்திரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை முறைகேடு

மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:56 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில், ஆதாயம் பெரும் நோக்கத்தோடு, இயக்குநர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்குவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாதது குறித்து மருத்துவக் காப்பீட்டுச் சேவையின் மூன்று இயக்குநர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

டாக்டர் பி. ரவி குமார், டாக்டர் சி.கே. ரமேஷ் குமார், டாக்டர் ஜி. விஜய குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

டெண்டர்கள் விடாமல் சரியான கொள்கைகளைப் பின்பற்றாமல், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒவ்வொரு மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.