ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஓடும் பேருந்திலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி; தாயுள்ளத்தோடு உதவிய பேருந்து ஊழியர்கள்

கர்நாடக மாநிலம் ஹஸன் பேருந்து நிலையத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஓடும் பேருந்திலேயே குழந்தைப் பேறு நடந்தது.

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 11:57 am


ஹஸன் : கர்நாடக மாநிலம் ஹஸன் பேருந்து நிலையத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஓடும் பேருந்திலேயே குழந்தைப் பேறு நடந்தது.

மடிக்கேரிப் பகுதியைச் சேர்ந்த ஹஸீனா, தனது தாய் பேகத்துடன் எச்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஹஸீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பேருந்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், ஆண் பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னார்.

அப்போது பேருந்திலேயே ஹஸீனாவுக்கு அவரது தாய் மற்றும் சக பெண் பயணிகள் உதவியுடன், அழகான பெண் குழந்தை பிறந்தது.

கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஊழியர்கள், தாய் மற்றும் சேய்க்கு புதிய ஆடை மற்றும் போர்வைகளை வாங்கிக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.

பின்னர் ஹஸீனா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.