ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுற்றுச் சுவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 10:19 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகிறார். அவர் இந்திய வருகையின் போது ஆமதாபாத்துக்கும் பயணம் செய்ய உள்ளார். அப்போது, சாலை வழியாக பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்பை ஆமதாபாத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திரா பாலம் - சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில், சாலையோரமாக மிகப்பெரிய சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஆமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரது பார்வையில் படாமல் இந்த குடிசைப் பகுதிகளை மறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 600 மீட்டருக்கு சுமார் 6 - 7 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. தேவ் சரண் அல்லது சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்த குடிசைப் பகுதியில்தான் சுமார் 500 குடிசைகளில் 2,500 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஏதோ முதல்முறை என்று நினைக்க வேண்டாம், முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆமதாபாத் வந்த போதும், இந்த குடிசைப் பகுதியை மிகப்பெரிய துணியால் சுற்றுச்சுவர் போல மூடப்பட்டிருந்ததாக குடிசைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.