அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுற்றுச் சுவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:51 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகிறார். அவர் இந்திய வருகையின் போது ஆமதாபாத்துக்கும் பயணம் செய்ய உள்ளார். அப்போது, சாலை வழியாக பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்பை ஆமதாபாத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திரா பாலம் - சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில், சாலையோரமாக மிகப்பெரிய சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஆமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரது பார்வையில் படாமல் இந்த குடிசைப் பகுதிகளை மறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 600 மீட்டருக்கு சுமார் 6 - 7 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. தேவ் சரண் அல்லது சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்த குடிசைப் பகுதியில்தான் சுமார் 500 குடிசைகளில் 2,500 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஏதோ முதல்முறை என்று நினைக்க வேண்டாம், முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆமதாபாத் வந்த போதும், இந்த குடிசைப் பகுதியை மிகப்பெரிய துணியால் சுற்றுச்சுவர் போல மூடப்பட்டிருந்ததாக குடிசைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.