அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

அரசு மற்றும் தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:50 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

அரசு மற்றும் தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எனினும், பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் வழக்கம் போல இயங்கின.

கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வியாழக்கிழமை (பிப். 13) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூரில் முழு அடைப்புக்கு எந்த அனுமதியும் பெறவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டால் எந்த பிரச்னையும் இல்லை.

கடை, ஹோட்டல் உள்ளிட்ட தொழில்நிறுவனங்களை மூட முயன்றால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணியில் ஈடுபடுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா். பேரணியின் போது பொது சொத்துக்களுக்கு சேதமோ, அசம்பாவிங்களோ நடைபெற்றால் அதற்கு போராட்டக் குழுவினரே பொறுப்பேற்க வேண்டும்.

பெங்களூரில் முக்கியச்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடவோ அல்லது ஊா்வலம் செல்லவோ அனுமதி வழங்கப்படவில்லை. அரசு, மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று துணை முதல்வா் லட்சுமண்சவதி அறிவித்துள்ளதால், பேருந்து போக்குவரத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.