அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஹைதராபாத் ஹோட்டலில் பனீர் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பலி

பெகும்பெட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பனீர் தொக்கு சாப்பிட்ட இரண்டு வயது சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:50 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


ஹைதராபாத்: பெகும்பெட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பனீர் தொக்கு சாப்பிட்ட இரண்டு வயது சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது பெற்றோருடன் ஹோட்டலுக்குச் சென்ற சிறுவன், ரொட்டி மற்றும் பனீர் தொக்கு சாப்பிட்டுள்ளான். சிறிது நேரத்தில் அவனுக்கு உணவு விஷமானதற்கான அறிகுறிகள் தென்பட்டு உயிரிழந்தான். இது குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பெங்களூருவில் மென்பொறியாளராக இருக்கும் ரவி நாராயணா, தனது மனைவி மற்றும் மகன் விஹானுடன் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க ஹைதராபாத் வந்துள்ளார்.

இரவு நேரத்தில் தனியார் ஹோட்டலில் ரோட்டி மற்றும் பனீர் தொக்கு வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், ரவிக்கும், ரோஹனுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாராயணா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஹோட்டல் அறையில் மகன் விஹான் மயக்கமடைந்துவிட்டதாக மனைவி தொலைபேசி மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்.

உடனடியாக விஹான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஹான் உயிரிழந்தார்.

இது குறித்து மர்ம மரணம் என்ற வகையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹோட்டலில் இருந்தும் உணவுப் பொருட்கள் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.