ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மருத்துவ பரிசோதனைக்கு கொடுக்கும் ரத்தம் சிங்கில் ஊற்றப்படுகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்

ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் கொடுக்கும் ரத்த மாதிரிகள், பல நேரங்களில் பரிசோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றப்படுவதாக  நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2020, 5:41 am


ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் கொடுக்கும் ரத்த மாதிரிகள், பல நேரங்களில் பரிசோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றப்படுவதாக  நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக வலைத்தளம் மூலம் இயங்கும் அமைப்பானது நடத்திய ஆய்வில்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் பற்றி எழுப்பப்பட்ட 6 கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் பல நேரங்களில் உரிய முறையில் சோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றுகிறார்கள், நோயாளிகளுக்கு தவறான தகவல்களை ரிப்போர்ட்டாக வழங்குகிறார்கள் என்றே பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒரு நோயைக் கண்டறிய செய்யப்படும் சோதனைக்கும், இருக்கும் நோய்க்கும் எந்த தொடர்புமே ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் பல நோயாளிகளுக்கு சரியான முறையில் நோய் கண்டறியப்படாமலேயே தவறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 

எனவே, மருத்துவத் துறையில் மிக முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று மருத்துவத் துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

எடுக்கப்பட்ட சர்வேயில், 34% பேர் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களின் ஆய்வு முடிவுகளை நம்புவதே இல்லை என்றும், 34% பேர் தங்களுக்கு தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். 

மேலும், இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவத் தவறுகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு முறையாக பயிற்சி கிடைக்கப்பெறாததே என்றும் ஹார்வேர்ட் பேராசிரியர் ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை கவரும் வகையில், குறைந்த கட்டணத்திலும், குறைந்த நேரத்திலும் ரத்தப் பரிசோதனைகளை அளிப்பதாக மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. இவையும், போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் இன்மையும் காரணமாக, பல ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாலேயே சிங்கில் ஊற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பரிசோதனைக் கூடங்களில்தான் சோதனை செய்ய வேண்டும் என்று நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள், அந்த மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று அங்கு முறையாக ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவர்கள் சோதிப்பது உண்டா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் கேள்வி முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.