அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மருத்துவ பரிசோதனைக்கு கொடுக்கும் ரத்தம் சிங்கில் ஊற்றப்படுகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்

ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் கொடுக்கும் ரத்த மாதிரிகள், பல நேரங்களில் பரிசோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றப்படுவதாக  நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:44 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் கொடுக்கும் ரத்த மாதிரிகள், பல நேரங்களில் பரிசோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றப்படுவதாக  நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக வலைத்தளம் மூலம் இயங்கும் அமைப்பானது நடத்திய ஆய்வில்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் பற்றி எழுப்பப்பட்ட 6 கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் பல நேரங்களில் உரிய முறையில் சோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றுகிறார்கள், நோயாளிகளுக்கு தவறான தகவல்களை ரிப்போர்ட்டாக வழங்குகிறார்கள் என்றே பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒரு நோயைக் கண்டறிய செய்யப்படும் சோதனைக்கும், இருக்கும் நோய்க்கும் எந்த தொடர்புமே ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் பல நோயாளிகளுக்கு சரியான முறையில் நோய் கண்டறியப்படாமலேயே தவறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 

எனவே, மருத்துவத் துறையில் மிக முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று மருத்துவத் துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

எடுக்கப்பட்ட சர்வேயில், 34% பேர் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களின் ஆய்வு முடிவுகளை நம்புவதே இல்லை என்றும், 34% பேர் தங்களுக்கு தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். 

மேலும், இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவத் தவறுகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு முறையாக பயிற்சி கிடைக்கப்பெறாததே என்றும் ஹார்வேர்ட் பேராசிரியர் ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை கவரும் வகையில், குறைந்த கட்டணத்திலும், குறைந்த நேரத்திலும் ரத்தப் பரிசோதனைகளை அளிப்பதாக மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. இவையும், போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் இன்மையும் காரணமாக, பல ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாலேயே சிங்கில் ஊற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பரிசோதனைக் கூடங்களில்தான் சோதனை செய்ய வேண்டும் என்று நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள், அந்த மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று அங்கு முறையாக ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவர்கள் சோதிப்பது உண்டா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் கேள்வி முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.