அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கரோனா வைரஸ்: விமானத்தில் தனியாளாக பயணித்து சென்னை வந்த பெண்

கரோனா வைரஸ் பாதித்த சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி வேலம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:42 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


சென்னை: கரோனா வைரஸ் பாதித்த சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி வேலம்.

சீனாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ்.  ஒரு வேளை யாராவது தொடர்ந்து தும்மினால் கூட அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கக் கூடுமோ என்று அச்சப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் சீனாவின் தியான்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியான வேலம் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியுள்ளார்.

வூஹான் நகரில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தியான்ஜின். அங்கிருந்து சென்னை திரும்பிய வேலம் நமது எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசுகையில், கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக சாலைகளில் கூட ஒரு சிலர்தான் நடமாடினார்கள். 

சில கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அந்த கடைகளிலும், மாஸ்க் அணிந்து கொண்டு உள்ளே வரவும் என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் தங்கியிருந்த விடுதி நிர்வாகம் தினமும் எங்களது உடல்வெப்ப நிலைய பரிசோதித்து தினமும் ஒரு மாஸ்க் கொடுக்கும்.

தற்போது விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டனர். ஆப்ரிக்கா, நேபாளம் மற்றும் இரண்டு இந்திய மாணவர்களைத் தவிர என்று கூறியுள்ளார்.

வேலம் தியான்ஜின் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் தனி ஒரு பயணியாக வந்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானத்தில் யாருமே இல்லை. ஆனால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் முழுக்க ஆட்கள் நிரம்பி வழிந்தனர் என்கிறார் வேலம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலம் சீனா, சிங்கப்பூர், சென்னை விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், சென்னை வந்தடைந்ததில் மகிழ்ச்சி என்றும் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.