அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா பாதிப்பு: கோழிக்கோட்டில் முன்னெச்சரிக்கை தீவிரம்

கேரளத்தில் தற்போது ஒன்றரை வயது சிறுவனுக்கு ஷிகெல்லாத பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஒன்றரை வயது குழகு ஷிகெல்லா பாதிப்பு: கோழிக்கோட்டில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

IANS

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது ஒன்றரை வயது சிறுவனுக்கு ஷிகெல்லாத பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கண்காணிப்பை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா  வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த விதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறை தயாராகவே இருப்பதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதித்து ஒன்றரை வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியை கடுமையாகத்தாக்கும் ஷிகெல்லா பாக்டீரியா பாதித்திருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

கேரளத்தில் கோழிக்கோடு மற்றும் சில பகுதிகளில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து கோழிக்கோடு மாவட்ட சுகாதமார அலுவலகர் மருத்துவர் வி. ஜெயஸ்ரீ கூறுகையில், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, சுகாதாரத் துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார். எனினும், மக்கள் ஷிகெல்லா பாக்டீரியாவின் முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடவும்ட அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் மா்ம நோய்த் தொற்றால் 11 வயது சிறுவன் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மேற்கொண்ட ஆய்வில் சிறுவனுக்கு ஷிகெல்லா பாக்டீரியா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி, திடீரென வயிற்றுப் போக்கு அதிமாகி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவா்களை காட்டிலும் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த வகை பாக்டீரியாவால் கேரளத்தில் 50க்கும் மேற்பட்டவா்கள் பாதித்துள்ளனா். அசுத்தமான தண்ணீா், உணவு வழியாக ஷிகெல்லா பாக்டீரியா பரவுவதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.