தெலங்கானாவில் 2.80 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.80 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.80 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 682 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தம் இதுவரை 2,71,649 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் தொற்றுக்கு புதிதாக ஒருவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,506 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 7,040 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 4,955 பேர் பல்வேறு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 47,991 சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...