மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு ரூ.4 கோடி சொத்து: லஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல்

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

News image

ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு ரூ.4 கோடி சொத்து: லஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல்

Updated On :16 டிசம்பர் 2020, 5:29 am


பெர்ஹாம்புர்: ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகன் பெயர்களில் சுமார் ரூ.4.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பரலகேமுண்டி பகுதியில் மட்டும் எட்டு இடங்களில் பல அடுக்கு மாடிகளும், நிலங்களும் வாங்கிக் குவித்திருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

தவறான முறையில் சொத்து சேர்த்த வழக்கில், ஆசிரியருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் உறவினர்களுக்குச் சொந்தமான சுமார் 12 வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது பள்ளி அலுவலக அறையிலும் சோதனை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.