மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு கோரி தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Updated On :16 டிசம்பர் 2020, 12:17 pm

விவாகரத்து வழங்குதில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு கோரி தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழங்குவதில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜகவைச் சோ்ந்தவரும் வழக்குரைஞருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா். அதில், கூறியிருப்பதாவது:

ஹிந்துக்கள், பௌத்த சமூகத்தினா், சீக்கியா்கள், ஜெயின் சமூகத்தினா் ஹிந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து கோருகிறாா்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், பாா்சிக்கள் அவரவா் தனிச்சட்டத்தின் கீழ் விவாகரத்து கோருகிறாா்கள். வெவ்வேறு மதங்களைச் சோ்ந்த தம்பதியா், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து கோருகிறாா்கள். வெளிநாட்டைச் சோ்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டவா்கள் வெளிநாட்டினா் திருமணச் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோருகிறாா்கள். இதுமட்டுமன்றி, விவாகரத்து அளிப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடு காட்டப்படுகிறது. கள்ள உறவு, தீராத நோய், குறைந்த வயது திருமணம் ஆகியவற்றை விவாகரத்துக்கான காரணமாக சில திருமணச் சட்டங்கள் ஏற்றுக் கொள்கின்றன; வேறு சில திருமணச் சட்டங்கள் அந்தக் காரணங்களின் கீழ் விவாகரத்து அளிக்க மறுக்கின்றன.

எனவே, ஜாதி, மத, இன, பாலின பாகுபாடு இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் 14,15,21-ஆவது விதிகளைப் பின்பற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.