சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கரோனா தடுப்பூசி: தன்னார்வலர்களாக மாறி 200 கி.மீ. பயணித்த இளம்தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக

News image
கரோனா தடுப்பூசி: தன்னார்வலர்களாக மாறி 200 கி.மீ. பயணித்த இளம்தம்பதி
Updated On :27 ஜனவரி 2024, 6:04 pm

IANS


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி உற்பத்தியில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் தன்னார்வலர்கள் பற்றாக்குறை, இதுபோன்ற சுயநலமில்லாத நபர்கள் மூலம் தகர்க்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மனோஜ் ராய் கூறுகையில், நான் அவ்வப்போது எனது பணி நிமித்தமாக இந்தூரில் இருந்து தலைநகர் போபாலுக்கு செல்வது வழக்கம். அப்போதுதான் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருவது எனக்குத் தெரிய வந்தது. உடனடியாக மாவட்ட அதிகாரிகளை சந்தித்து என்னை தன்னார்வலாக இணைத்துக கொண்டேன். 

வீட்டுக்கு வந்ததும், எனது மனைவியும் தன்னார்வலராக இருந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்தார். இருவரும் டிசம்பர் 8ம் தேதி போபால் வந்தடைந்தோம், எங்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டோம் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.