தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து முன்மாதிரியாக மாறிய தில்லி கொடையாளி

ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார் தில்லியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் தப்ரேஸ் கான்.

News image
ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து முன்மாதிரியாக மாறிய தில்லி கொடையாளி
Updated On :27 ஜனவரி 2024, 5:02 pm

ENS


புது தில்லி: ஏழு முறை பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார் தில்லியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் தப்ரேஸ் கான்.

தில்லியின் ஜஹாங்கிர்புர் பகுதியைச் சேர்ந்த கான், முதல் பிளாஸ்மா கொடையாளியாக அறியப்பட்டவர். கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது முறையாக பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பலருக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பிளாஸ்மா தானம் அளித்து வருகிறேன். நான் இதைச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்றே நான் கருதுகிறேன் என்கிறார்.

கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த தனது சகோதரி மூலம் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான கான், ஏப்ரல் 5-ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். பிறகு ஏப்ரல் 20-ம் தேதி முதல் முறையாக பிளாஸ்மா தானம் அளித்தார். 

அதன்பிறகு, கரோனா பாதித்து உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும் யாருடைய குடும்பத்தினர் வந்து கானை தொடர்பு கொண்டாலும், பிளாஸ்மா தானம் அளிக்க மறுத்ததே இல்லை.

ஒருவரை உயிர் அபாயத்தில் இருந்து காப்பாற்றும் போது அவரது குடும்பத்தினர் என்னைக் கட்டிப்பிடித்து அழுவார்கள். அப்போது அவர்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

தற்போது வரை எனது உடல் வைரஸை எதிர்க்கும் ஆற்றலை உற்பத்தி செய்த வருவதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அது பிறருக்கு உதவுவதற்காகவே என்றும் கருதுகிறேன் என்கிறார்.

மேலும், என்னுடன் பழகிய பலரும், கரோனா வந்தவுடன், என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார்கள். அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்கிறார் வருத்தத்தோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.