நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

இந்த ஆண்டு அமோக விளைச்சல்; ஆனால் குப்பையில் கொட்டுகிறோம்: பூ விவசாயி கண்ணீர்

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

ANI


இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.

Story image

சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பூ விவசாயி சீமா, தனது குடும்பத்தினருடன், தினமும் விவசாய நிலத்துக்கு வந்து அழகழகாய் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்து அருகே இருக்கும் குப்பையில் கொட்டி வருகிறார். பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டால், செடியில் பூச்சி ஏற்பட்டுவிடும் என்று நாள்தோறும் கணவர் மற்றும் மகளுடன் பூக்களைப் பறித்து குப்பையில் கொட்டி வருகிறார்.

Story image

இது பற்றி அவர் கூறுகையில், தினமும் நாங்கள் இங்கு வந்து பூக்களை பறித்து குப்பையில் கொட்டுகிறோம். ஒரு வேளை இப்படி ஒரு சூழ்நிலை வராவிட்டால், நாங்கள் மிகப்பெரிய லாபத்தை பார்த்திருப்போம், ஏன் என்றால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்கிறார் கண்ணீரோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.