ஊரடங்கால் புழுக்களுக்கு உணவாகிப் போன காலிபிளவர்
ஊரடங்கு நடவடிக்கையால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


லூதியானா: ஊரடங்கு நடவடிக்கையால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விளைந்த பொருட்களை அறுவடை செய்ய ஆள் இல்லாமலும், போக்குவரத்து வசதி இல்லாமலும் வயலிலேயே காய விடும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் நன்கு செழித்து வளர்ந்த காலிபிளவர் தோட்டங்களுக்குத் தேவையான பூச்சி மருந்து மற்றும் உரம் போன்றவை ஊரடங்கு நடவடிக்கையால் கிடைக்காமல் போனதால் பூக்களை புழுக்களே உண்டுவிட்டன.

புழுக்கள் சாப்பிட்ட பூக்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை ரூ.50 ஆயிரம் அளவுக்கு செலவு செய்திருக்கிறோம், இதுபோன்று ஒரு முறையும் ஆனதில்லை. இந்த முறை என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என்கிறார்கள் வாடிய முகத்துடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...