பஞ்சாபின் மோகா மாவட்டமும் கரோனா இல்லாத பகுதியானது
பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து


மோகா: பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, அந்த மாவட்டமும் கரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பினர் என்று பஞ்சாப் மாநில சிறப்பு முதன்மைச் செயலாளர் கேபிஎஸ் சித்து தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் மட்டும் 251 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49 பேர் குணமடைந்து 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...