அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஜார்க்கண்ட்டில் கரோனாவுக்கு 4-வது நபர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நான்காவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 11:15 am

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நான்காவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ராஞ்சியின் ஹிந்த்பிரி வட்டாரத்தில் வசித்து வந்த பெண் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை 10.45-க்கு மணியளவில் உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி பெண்ணின் கணவர் கரோனாவுக்கு பலியானார். 

ஹிந்த்பிரி பகுதியில் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு நான்காவது நபர் பலியான நிலையில், இதுவரை நான்கு பேர் மட்டும் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.