ஒருவருக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டால் அவர் அதிகபட்சமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 28 நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர் கரோனா பாதிப்பு இல்லாதவர் என்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்.
ஆனால், 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது சரியானதுதானா? என்று கேட்டால் இல்லை என்பதே தற்போதைய பதிலாகக் கிடைத்துள்ளது.
துபையில் இருந்து திரும்பிய கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 29வது நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிவிலக்கான சில கரோனா தொற்று பாதிப்புகளால், மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். துபையில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள எடசேரி பகுதியில் தங்களது வீட்டுக்கு வந்த இரண்டு சகோதரர்களில் ஒருவர்தான் தற்போது 29வது நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டவர். இவர்கள் வீட்டில் இருந்து நேராக தனிமைப்படுத்தும் மையத்துக்குச் சென்றுவிட்டனர்.
ஆனால், இவர்களது 67 வயது தந்தை, உடல் நலப் பிரச்சினையால் மருதுவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஏப்ரல் 11-ம் தேதி அவருக்குக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி, பேரப்பிள்ளை, ஒரு மகனுக்கும் கரோனா உறுதியானது. மறறொரு மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா சோதனை செய்யப்பட்டு வந்ததில், 29வது நாளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எடசேரி நபருக்கு கரோனா பாதிப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதன் மூலம், 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும், ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீடு திரும்பும் நபர்கள், மேலும் ஒரு வாரம் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


