புது தில்லி: தில்லியில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, தில்லி அரசு ஐந்து முக்கியத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த இருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
அதாவது பரிசோதனை, கண்டுபிடிப்பது, சிகிச்சை, குழுவாக பணியாற்றுதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, கண்காணித்தல் உள்ளிட்ட ஐந்து பணிகளை தில்லி அரசு முடுக்கி விட்டிருப்பதாக கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இந்த முக்கிய திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துவதுடன், தில்லியில் சுமார் 30 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.
தில்லி அரசு விரைவில் அதிவேக பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. பரிசோதனை செய்யாவிட்டால் யாருக்கு கரோனா இருக்கிறது? யாருக்கு கரோனா இல்லை என்பது எப்படி தெரியும். எனவே முதலில் பெரிய அளவில் தென்கொரியாவைப் போல பரிசோதனையை முடுக்கிவிட இருக்கிறோம்.
அதற்காக ஒரு லட்சம் பரிசோதனைக் கருவிகள் வெள்ளிக்கிழமை கிடைத்துவிடும். அதன் பிறகு கரோனா அதிகம் பரவிய பகுதிகளில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும்.
இதுபோல அனைத்து திட்டங்களையும் மிகத் தீவிரமாகவும், வேகமாகவும் செய்ய திட்டமிட்டுள்ளோம். கரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சுமார் 27,702 பேரின் தொலைபேசி எண்கள் காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அவர்கள் அறிவுறுத்தியபடி நடந்து கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தில்லியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. தில்லியில் தற்போது கரோனா நோயாளிகளுக்காக மட்டும் சுமார் 3 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தில்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


