தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இருமல், காய்ச்சல் ஏற்பட்டதால் உத்தரப்பிரதேச இளைஞர் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஜமால்புர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா அச்சம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2020, 9:29 am


பான்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஜமால்புர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா அச்சம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் இருமல் தான் கரோனாவுக்கு அறிகுறி என்பதால், தனக்கு கரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

காய்ச்சல் மற்றும் இருமல் வந்ததால், அவரை கிராமத்தினர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும், இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட நபர், சிகிச்சைக்காக எந்த அரசு மருத்துவமனையையும் நாடவில்லை என்றும் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தில்லியில் பணியாற்றி வந்த ராஜேந்திரா, மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஊருக்குத் திரும்பிய நிலையில், தொடர்ந்து அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.