திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிப் பேசிய டென்னிஸ் வீரர் யார்? ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாதந்தோறும் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றி வருகிறார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 6:20 am

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாதந்தோறும் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத்-தில் (மனதின் குரல்) ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.

அப்போது ரஷியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மெத்வதேவ் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

மோடி பேசிய உரையில், இதேபோல், அண்மையில் ரஷிய டென்னிஸ் வீரரின் பேச்சு என் இதயத்தைத் தொட்டது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடாலிடம் ரஷியாவின் இளம் வீரரான டேனில் மெத்வதேவ் தோல்வியடைந்தார். எனினும், ஆட்டம் முடிந்த பின் மெத்வதேவ் ஆற்றிய உரை அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தது. அது அவரது முதிர்ச்சியையும் பணிவையும் வெளிப்படுத்தியது. 

Story image

அதேபோல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஊக்கமளிக்கும் சக்தியாக ரஃபேல் நடால் திகழ்கிறார். அவர், ரஷிய வீரர் மெத்வதேவைப் புகழ்ந்தார். இந்த இருவரின் பேச்சையும் மக்கள் விடியோவில் பார்க்க வேண்டும் என்றார் மோடி.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நாடலிடம் 23 வயதே ஆன மெத்வதேவ் 5-7, 3-6, 7-5, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றார்.

போட்டிக்குப் பிறகு மெத்வதேவ் பேசுகையில், இந்த இரவை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கவே மாட்டேன். ரஃபேல் நடாலின் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் நிச்சயம் மறக்க முடியாது. அவரும் நிச்சயம் அவரது முதல் இறுதிப் போட்டியை மறக்க மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வென்றிருந்தாலும், நான் தோற்றிருந்தாலும் கூட இது மிகச் சிறப்பானதொரு போட்டியாக இருந்தது. இது மிகச் சிறந்த கதை. இந்த பருவக் காலம் முழுக்கவே எனக்கு அருமையாக அமைந்துள்ளது. நான் 70 வயது ஆனாலும் கூட இந்த நிகழ்வை நிச்சயம் மறக்க மாட்டேன் என்று பேசினார்.

ஒரு வீரர் எப்போதுமே, எதிர்த்து போட்டியிடும் வீரரின் பெருமையைப் பேச மாட்டார்கள். ஆனால், மெத்வதேவ் நடாலின் சிறப்புகளை அழகாகக் குறிப்பிட்டுப் பேசினார். அதுமட்டுல்ல, நாடலைக் குறிப்பிட்டு எதிர்த்துப் போட்டியிட்டு விளையாடுவது மிகக் கடினம் என்றும் மெத்வதேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.