தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மோடியை நாட்டின் தந்தை என்பதா? கொதிக்கிறார் காந்தியின் கொள்ளுப் பேரன்!

அமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தந்தையாகத் தெரியலாம், ஆனால், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு அது பிடிக்கவில்லை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:14 am

ENS


மும்பை: அமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தந்தையாகத் தெரியலாம், ஆனால், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு அது பிடிக்கவில்லை.

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன்னுக்கு மாற்றாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைக் கருதுகிறாரா என்று ஒரு சரவெடிக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி.

கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதற்கு முன்பு இந்தியா பழைய கந்தை போல இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஏராளமான வேறுபாடுகள், மோதல்கள் இருந்தன. ஆனால், மோடி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விட்டார். ஒரு தந்தையைப் போல. அவர் தான் இந்தியாவின் தந்தை என்று குறிப்பிட்டார்.

செப்டம்பர் 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் பேசிய இந்த பேச்சுக்கு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் தேசத் தந்தையின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவரை வரவேற்கிறேன். அமெரிக்காவின் தந்தை என்று அறியப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவேளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பலாம் என்று கூறியுள்ளார்.

59 வயதாகும் துஷார் காந்தி, செய்தியாளர் அருண் காந்தியின் மகனாவார். அருண் காந்தி, மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகனாவார்.

அதே சமயம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தைக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து மகாத்மா காந்தி அறக்கட்டளையின் அறங்காவலரான துஷார் காந்தி கூறுகையில், அது வெறும் அடையாளத்துக்காக செய்யப்படும் நிகழ்வு மட்டுமே என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.