தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேநீர் பைகள் மூலம் கிடைப்பது சுவையான தேநீர் மட்டுமல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

அலுவலகம், நாகரீகக் கடைகளில் மட்டுமல்ல தற்போது வீட்டில் வடிகட்ட வேண்டாம், அப்படியே குடிக்கலாம் என்ற விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது 'டி பேக்'ஸ்கள். 

News image
தேநீர் பைகள்
Updated On :31 ஜனவரி 2024, 10:13 am

ENS

அலுவலகம், நாகரீகக் கடைகளில் மட்டுமல்ல தற்போது வீட்டில் வடிகட்ட வேண்டாம், அப்படியே குடிக்கலாம் என்ற விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது 'டி பேக்'ஸ்கள். 

அந்த தேநீர் பைகளில் இருந்து உங்களுக்கு சுவையான தேநீர் மட்டும் கிடைக்கவில்லை. அதோடு, லட்சக்கணக்கான மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள தேநீர் பையின் துகள்களும் தேநீரின் சுவையோடு சுவையாகக் கலந்து உங்களது வயிற்றுக்குள் சென்று சேருகிறதாம்.

தற்போது இதனால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நமது ஜீரண மண்டலத்தை பாதிக்கும் வகையில் இதன் தாக்கம் இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியான கட்டுரை எச்சரிக்கிறது.

அளவில் மிகச் சிறிய, சிறிய மட்டுமல்ல, மிக மிகச் சிறிய துகள்கள் தேநீரில் கலந்து வயிற்றுக்குள் செல்கிறது.

கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்து இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு மனித உடலுக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யவில்லை.

இந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்களின் தேநீர் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தேநீர் பைகளை வாங்கி வந்து அதனை கட் செய்து, அதில் இருக்கும் டீத்தூளை வெளியே கொட்டிவிட்டு, பையை நன்கு அலசி விடுவார்கள். பிறகு அதனை தண்ணீரில் கொதிக்க விட்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு தேநீர் பைகளும் 11.6 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களையும், 3.1 பில்லியன் நானோ பிளாஸ்டிக் துகள்களையும் நீரில் கலக்கச் செய்கிறது.

இது வேறு எந்த உணவுப் பொருளையும் விட ஆயிரம் மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அடுத்தகட்டமாக இந்த பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலுக்கு எந்த அளவுக்கு தீங்கிழைக்கும் என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.