ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 9:17 am


புது தில்லி: உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்தது உள்ளிட்ட சில முக்கிய வரி குறைப்பு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டீவீட் செய்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு செய்திருப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் முடியும். 

நிதித்துறையின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும், 130 கோடி இந்தியர்களின் மனங்களை வெல்லவும் முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.