பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பணியிடமாற்றத்துக்கான காரணத்தை வெளியிட எவ்வித தயக்கமும் இல்லை: கொலீஜியம்

தலைமை நீதிபதிகளின் பணியிடமாற்றத்துக்கான காரணம் வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்று கொலீஜியம் இன்று அறிக்கை வெளியிட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 10:04 am

ENS


தலைமை நீதிபதிகளின் பணியிடமாற்றத்துக்கான காரணம் வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்று உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ் எஸ் கல்கோன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ கோரிக்கை வைத்தார். ஆனால், அவருடைய கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமை நீதிபதி தஹில ராமாணீ அளித்த தீர்ப்புகளைக் குறிப்பிட்டு இதற்குப் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்றும் விமரிசிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொலீஜியம் இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், 

"அண்மையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்/நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்வது தொடர்பான கொலீஜியம் பரிந்துரை குறித்து ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகின. நீதித் துறை நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தெளிவான காரணங்களுக்காகத்தான், ஒவ்வொரு பணியிடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது. பணியிடமாற்றத்துக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை வெளியிட கொலீஜியத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த நீதிபதிகளுள் நீதிபதி தஹில ராமாணீயும் ஒருவர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் உள்ளனர். மொத்தம் 4 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. மறுபுறம், மேகாலயா உயர்நீதிமன்றம் 2013-இல் தொடங்கப்பட்டது. அங்கு வெறும் 3 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

எனவே, நாட்டின் பழமையான, பெரிய உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு புதிய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.