நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த காலாண்டைவிட 0.8 சதவிதம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது.
கடந்த வருடம் இதே காலாண்டில் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 7.8 சதவீதமாக இருந்துள்ளது. மத்திய நடவடிக்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ‘பொருளாதரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமரும் பொருளாதர வல்லுநருமான மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, ‘ப.சிதம்பரம் ஏராளமான ஊழல் செய்துள்ளார். அவர் மீது 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு, 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கும். ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட உள்ளனர். விரைவில் திகார் ஜெயலில் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தலாம். பொருளாதார மந்த நிலைக்கு பாதி காரணம் காங்கிரஸ் அரசு.
மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அவர் கைகூலியாக இருந்தார். காங்கிரஸ் செய்த அதிக ஊழல் தான் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம். அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது.
நரேந்திர மோடி ஒரு வீரர். பல நல்ல செயல்களை செய்துள்ளார். பொருளாதாரத்தில் நல்ல கொள்கை இருக்க வேண்டும். பா.ஜ.க அரசில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதியமைச்சராக இருந்ததில்லை.
இந்தியாவில் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும். தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. அவரால் தற்போதைய பொருளாதார தேக்கநிலையை சரி செய்ய முடியாது’ என்று விமர்சனம் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

சீனா, ரஷியா இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும்: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


