இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, ‘ப.சிதம்பரம் ஏராளமான ஊழல் செய்துள்ளார். அவர் மீது 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு, 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கும். ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட உள்ளனர். விரைவில் திகார் ஜெயலில் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தலாம். பொருளாதார மந்த நிலைக்கு பாதி காரணம் காங்கிரஸ் அரசு.