தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்?

கூடத்தாயி தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
லும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி
Updated On :31 ஜனவரி 2024, 10:19 am

ENS


கோழிக்கோடு: கூடத்தாயி தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும், பொறாமை காரணமாக, பெண் குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களை அவர் குறிவைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கேரளாவையே உலுக்கியிருக்கும் கூடத்தாயி தொடர் கொலை வழக்கு விசாரணையை கண்காணித்து வரும் கோழிக்கோடு எஸ்பி கேஜி சிமோன், இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளில் சொத்து மற்றும் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் உறவினர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Story image

தாமரசேரி கூடுதல் தாசில்தாரின் மகள் ஜெயஸ்ரீ மற்றும் தனது கணவரின் சகோதரி, ஒரு தொழிலதிபர் என அவரது கொலைப் பட்டியலில் இன்னும் சிலரின் பெயர்களும் இருக்கின்றன.

உணவில் சயனைடு விஷம் வைத்துக் கொள்வதுதான் ஜோலியின் வழக்கமான ஜோலி. அனைவரையுமே ஒரே முறையில் கொலை செய்திருக்கும் ஜோலி, இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரது சில கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. காரணம், இவரைப் பற்றி குடும்பத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்ததால், இவரிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்துள்ளதே காரணம் என்கிறார்கள்.

ஆனால் இவரது கொலைகளுக்கும், கொலை செய்யவிருந்த திட்டங்களுக்கும் என்ன நோக்கம் என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்புகின்றனர். அதில்லாமல், இவர் மீது சந்தேகம் எழுந்தும், யாருமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன் என்பதும் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.