அந்த டைரியில் யார் யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது, பாக்கி, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மத்தியப் பிரதேசத்தின் முக்கியப் பதவிகளை வகித்த முன்னாள் அரசியல்வாதிகளின் பெயர்கள் அந்த டைரியில் இடம்பிடித்திருந்ததாக ஐஏஎன்எஸ் செய்தி தெரிவிக்கிறது. அந்த டைரியில் இடம்பெற்றிருந்த நபர்கள் எல்லாம் தற்போது தில்லியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் பெயர்களும் டைரியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாம்.